உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிகோரி மனித சங்கிலி போராட்டம்

0
133

இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் 4 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

இந்த போராட்டத்தில் இணைவதற்கு, தமது பிரதேச தேவாலயங்களில் ஒன்று கூடுமாறு அனைத்து பொதுமக்களையும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

இன, மத மற்றும் அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து பொதுமக்களும் இதில் இணைய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், சுதந்திரத்தின் கரங்களை வலுப்படுத்தவும் இந்த போராட்டம் அமையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதியும் கூட இந்த விடயத்தில் அக்கறை கொண்டிருப்பதை காணமுடியவில்லை என்றும் கர்தினால் குற்றம் சுமத்தியுளளார்.

எனவே ஏப்ரல் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்து நீர்கொழும்பு, கடுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் வரையில் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.