Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வது பெரும் பிரச்சினையாக மாறி வருவதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் (SLATCA) தெரிவித்துள்ளது.உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக SLATCA செயலாளர் ராஜித செனவிரத்ன தெரிவித்தார்.
“ஒரு சர்வதேச ஆட்சேர்ப்பு நிறுவனம் தற்போது மத்திய கிழக்கில் 20 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்களை மேற்கொண்டு வருகிறது. ஒரு பாரிய அளவிலான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஒரே நேரத்தில் வெளியேறினால் சிக்கல் இருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்ட்டார்.“நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து குடியேற்றத்தைத் தடுக்க ஒரு திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளோம். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் பாரிய பிரச்சினை இருக்காது,”ஐக்கிய இராச்சியத்தின் நிலைமை இலங்கையில் இருந்து இங்கிலாந்து மற்றும் அதற்கு நேர்மாறாக இதுவரை விமான இயக்கத்தை பாதிக்கவில்லை.” பிராந்தியத்திற்கு மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் இன்னும் இரத்து செய்யப்படவில்லை,” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.