எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது

0
249

எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் 25ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பாக விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றில் அங்கீகாரம் பெறப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

24ஆம் திகதி அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் தொடர்பாகவும், சிறீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.