மட்டக்களப்பு ஏறாவூர் சமூக சேவைகள்படினால் ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலத்தின் கேட்போர் கூடத்தில் இவ்வருடம் ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றி ஒன்பது பாடகளிலும் 9 ஏ தரச் சித்தியெய்திய மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினை நடாத்தியது.
அமைப்பின் தலைவர் பாறூக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி 9ஏ பெறுபேறுகளைப் பெற்ற 29 மாணவர்கள் பதக்கம் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் றிப்கா , கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் கௌரவா உறுப்பினரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான றசீட்,ஏனைய அதிதிகளாக ஏறாவூர் நகல பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்,எஸ்எஸ்டிஓ அமைப்பின் கல்விக் குழுவிற்குப் பொறுப்பான பிரபல விரிவுரையாளர் றியாஸ் எஸ்எஸ்டிஓ இன் பங்காளி அமைப்புகளின் தேசிய தலைவரும் புத்தள மாவட்ட எஸ்எஸ்டிஓ அமைப்பின் தலைவருமான மௌலவி தாஹிர் ஹம்ஸார் அவர்களும்,பி.எஸ்.எஸ.ஒ அமைப்பின் உதவிச் செலாளர்
கௌது இனாமுல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அமைப்புகளின் தேசிய தலைவர் மௌலவி தாஹிர் ஹம்ஸார் அவர்கள் தனது உரையில் இந்த 9யு மாணவர்களை பாராட்டி கௌரவிப்பதென்பது இவர்கள் உயர்தரப் பரீட்சையிலும் இதே போன்று உயர் சித்திகளைப் பெற்று உயர்பதவிகளைப் பெற்று நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த பிரஜையாக திகழ வழிவகுக்கும் முகமாக அவர்களை ஊக்கப்படுத்துவதேயாகும் எனத் தெரிவித்தார் .
நிகழ்வின் போது சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் மகளிர் அணிக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது