ஏழு புதிய கேசினோ உரிமங்களை வழங்க அரசு திட்டம் : சம்பிக்க ரணவக்க

0
165
ஏழு புதிய கசினோ உரிமங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக 43 ஆவது படையணியின் தலைவரும் புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய குடியரசு முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பில்க ரணவக்க தெரிவித்துள்ளார்.“ஏற்கனவே வழங்கப்பட்ட நான்கு சூதாட்ட அனுமதிப்பத்திரங்களில் இருந்து கடந்த 28 வருடங்களாக ஒரு டொலரையாவது வரி வருமானமாக நிதி அமைச்சும் ஏனைய பொறுப்பான நிறுவனங்களும் பெறத் தவறியுள்ள நிலையில் ஏழு புதிய உரிமங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என ரணவக்க தெரிவித்துள்ளார்.“கடந்த 28 வருடங்களாக இந்த நாட்டில் கேசினோக்கள் இயங்கி வருகின்றன. கிடைக்கக்கூடிய பதிவுகளை நாம் ஆராய்ந்தால், விதிமுறைகளின்படி கூட சூதாட்ட விடுதிகள் சரியாக இயங்கவில்லை என்பது புலனாகிறது. பலர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அப்பால் மிகவும் இடையூறான முறையில் செயல்பட்டு வருகின்றனர். அவற்றில் நான்கு மட்டுமே முறையான உரிமத்தின் கீழ் இயங்கி வருகின்றன. அவர்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தவில்லை. கேசினோக்களில் பல வகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. நான்கு சூதாட்ட விடுதிகள் விதிமுறைகளை மீறி, கடந்த 28 ஆண்டுகளில் ஒரு டொலரையாவது வரியாக செலுத்துவதைத் தவிர்த்துவிட்டன. தற்போதுள்ள நான்கு சூதாட்ட விடுதிகளை விதிமுறைகளுக்கு இணங்க வரி வசூல் செய்வதை முறைப்படுத்தாமல், மேலும் ஏழு உரிமங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவர உங்களுக்கு நூற்றுக்கணக்கான சூதாட்ட விடுதிகள் தேவையில்லை என்று ரணவக்க கூறியுள்ளார் .