ஐந்து ஆண்டுகளின் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கான கதவைத் திறந்தது வடகொரியா!

0
12

வடகொரியாவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா,கனடா, கிரீஸ், நியூசிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் வடகொரியாவிற்குப் பயணித்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளில் 90% க்கும் அதிகமானோர் சீனர்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

சீன பிரஜைகள் சுமார் 300,000 பேர் வரை வடகொரியாவுக்குப் பயணித்துள்ளனர்.