ஓடிக்கொண்டிருந்த போது பற்றி எரிந்த உந்துருளி: தெய்வாதீனமாக உயிர்தப்பிய தாயும் மகனும்!

0
227

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்தபோது, வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அந்த உந்துருளி தீப்பற்றி எரிந்தது.
ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம் கள்ளுத்தவறணைக்கு அருகில் உள்ள கொங்கிறீட் வீதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றது.
பெண்களுக்கான உந்துருளி ஒன்றில் தாயார் தனது மகனை ஏற்றி ஓடிக்கொண்டு வரும்போது மோட்டார்சைக்கிளில் திடீரென வெடிப்பு சத்தம் கேட்டதை அடுத்து அந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.
இதன்போது மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதில் பயணித்த தாயும் மகனும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.