எதிர்வரும் 7ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பட்டது.
அந்தப் பரீட்சையை 20 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி, சமூக ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
இந்தப் பரீட்சை கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகி 22 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.