கடும் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு – மன்னார் மக்கள் பாதிப்பு!

0
141

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வரட்சியான காலநிலை நிலவி வருகின்றமையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கால்நடைகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன.

குறிப்பாக சில இடங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்டத்தில் வரட்சி காரணமாக மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிலும் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள மல்லவராஜன், கட்டையடம்பன், மாதா கிராமம், பெரிய முறிப்பு, இரணை இலுப்பகுளம், கீரிசுட்டான் போன்ற பகுதிகள் அதிகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

வரட்சி காரணமாக குறித்த கிராமங்களை சேர்ந்த 952 குடும்பங்களை சேர்ந்த 3244 நபர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வரட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் பாதிக்கப்படும்
குடும்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.