திருகோணமலை, கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் அமைக்க அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.இதன்பின்னர் அவர் ஊடகவியலாளர்களுக்கு இதனைத் தெரிவித்தார்.