இலங்கைக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் வாழ்வாதாரத்தை இழந்த 9,883 மீனவர்களுக்கு, 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவை வழங்குவதற் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பிரதேச செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.
கப்பல் தீ காரணமாக நேரடியான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நீர்கொழும்பு, வத்தளை, கட்டான மற்றும் ஜாஎல பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கே 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
நீர்கொழும்பில் 6,042 மீனவக் குடும்பங்களுக்கும் வத்தளையில் 1,409 மீனவக் குடும்பங்களுக்கும், கட்டான பிரதேசத்தில் 233 மீனவக் குடும்பங்களுக்கும், ஜாஎல பிரதேசத்தில் 69 மீனவக் குடும்பங்களுக்கும் 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கப்பல் தீ காரணமாக மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 1991 மீனவக் குடும்பங்களுக்கும், வத்தளை பிரதேசத்தில் 116 மீனவக் குடும்பங்களுக்கும், கட்டான பிரதேசத்தில் 14 மீனவக் குடும்பங்களுக்கும், ஜாஎல பிரதேசத்தில் 09 மீனவக் குடும்பங்களுக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்காக 49,415,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.