கவிஞர் குறிஞ்சிவாணனின் நினைவுப்பேருரை அஞ்சலி நிகழ்வு

0
223

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு பணியாற்றி அமரத்துவம் அடைந்த, மலையக மண்ணைப் பிறப்பிடமாக கொண்ட கவிஞர் குறிஞ்சிவாணனின்
நான்காவது ஆண்டு நினைவுப் பேருரையும் அஞ்சலி நிகழ்வும் திருவதிகை கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் திருக்கோவிலில் இடம்பெற்றது.
திருவதிகை கலைக்கூடத்தின் உப தலைவர் எஸ்.பி.நாதன் தலைமையில் திருக்கோவில் கலாசார மத்திய நிலையத்தில்
நிகழ்வு இடம்பெற்றது.இடம்பெற்று இருந்தன.
அமரர் கவிஞர் குறிஞ்சிவாணனின் திருவுருவப்படத்திற்கு அவரது மகள் தமிழ்செல்வி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்து மதகுருமார்கள் மற்றும் திருவதிகை கலைக்கூடத்தின் கலைஞர்களும் இலக்கிய செயற்பாட்டாளர்களும் தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலிகளை செலுத்தியதோடு
அவரைப் பற்றிய நினைவுப் பேருரைகளையும் நிகழ்த்தப்பட்டது.