காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கரையோரப் பகுதியில் ஏற்பட்ட தீயால் இரண்டு ஏக்கர் நாசம்

0
179

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் – நோட்டன் பிரதான வீதி காசல்ரீ நீர்த்தேக்கத்தின் கரையோரப் பகுதிகளில் நேற்று (21) பிற்பகல் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, சுமார் இரண்டு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

மலையகத்தில் தற்போது வறட்சியான காலநிலை நீடித்து வருகின்றது.

இந்நிலையில், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இனந்தெரியதோரால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

சமர்வில் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.