தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும்இ கெசல்கமுவ ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளான பொகவந்தலாவ, ஹட்டன், டிக்கோயா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.
எனினும் இரண்டு மாதங்களாக இந்தப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்குக் குடிநீர்ப் பிரச்சினை வெகுவாக காணப்பட்டதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.C