அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/1-20.png)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/2-20.png)
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதர் இக் கொடுப்பனவை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/3-18.png)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/4-18.png)
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி. பத்மா ஜெயராஜா வங்கி முகாமையாளர்களான ஏ.எல்.ஸெட்.பஹ்மி எஸ்.எச்.எம். முஸம்மில் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/5-14.png)
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/7-7.png)
இக்கொடுப்பனவானது சமுர்த்தி பெறுவோர், சமுர்த்தி பெற தகுதியானோர், விஷேட தேவையுடையோர், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் மற்றும் தொழில் இழந்தோருக்காக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://eelanadu.lk/wp-content/uploads/2021/06/8-4.png)