கியூடெக் நிறுவனத்தால் உலர் உணவுப் பொருட்கள் யாழ் அரச அதிபரிடம் கையளிப்பு!

0
245

கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினரால் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் கரித்தாஸ் கியூடெக் அரச சார்பற்ற நிறுவனத்தினரால் இன்றைய தினம் (04.06.2021) 1200ரூபா பெறுமதியான 300 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் உலர் உணவுப் பொதிகள் கரவெட்டி, கோப்பாய், சங்கானை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.