கிராம அபிவிருத்தி நிதியத்தினால்(RDF) அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் கையளிப்பு.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார பாதுகாப்புப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களிடம் RDFஅரச சார்பற்ற நிறுவனத்தினரால் இன்றைய தினம் (04.06.2021) கொவிட்- 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொது மக்களிற்கான 200 பாதுகாப்பு ஆடை(PPE), 1500 Face mask, 200 Face shield, 200 Sanitizer ஆகிய அத்தியாவசிய சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.