கிளிநொச்சி நகரில், இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் கைது

0
185

கிளிநொச்சி நகரில், அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸாரால், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி நகர மின்சார சபை முன்பாகவுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முன்னால் வைத்து, இரவு வேளை, இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, படுகாயமடைந்த குடும்பஸ்தர், மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்த நிலையில், சந்தேக நபர்கள், தலைமறைவாகி இருந்துள்ளனர்.
இந்த நிலையில், கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட புலன் விசாரணைகளின் அடிப்படையில், பிரதான சந்தேக நபர் ஒருவர், நேற்று, கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.