கிளிநொச்சி பூநகரியிலும் இந்திய படகுகள் ஏலத்தில் விற்பனை!

0
210

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில், 8 இந்திய படகுகள், 94 ஆயிரத்து 300 ரூபாவுக்கு, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இன்று, கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து, கொழும்பில் இருந்து வருகை தந்த மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் குழு, படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் போது, ஏலத்தில் விடப்பட்ட அனைத்து படகுகளும், மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதம் அடைந்திருந்தாக, எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.