கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!

0
52

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதியை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெற்றது.

காணாமல்போன தமது உறவுகளின் படங்களையும் தமது கோரிக்கை வாசகம் அடங்கிய பாதாகைகளையும் ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலம் போராட்டம் நடைபெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.