‘இருப்பதை காக்க ஏற்றதைச் செய்க’ என்ற தொணிப்பொருளில் கிழக்கு தமிழரின் சம காலமும் எதிர் காலமும் என்ற தலைப்பில் முதலாவது கருத்தாடல் களம் நேற்று மாலை மட்டக்களப்பு செங்கலடியில் நiபெற்றது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடலில் கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரமுகர்வர்கள்,கல்விமான்கள்,புத்திஜீவிகள்,என பலர் கலந்து கொண்டு சமகால அரசியல், அபிவிருத்தி,மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் தமிழ் பரப்பில் மக்களின் இருப்பு தொடர்பாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இறுதியில் ‘என்றோ ஒரு நாள் எங்கள் தமிழர்கள் தமிழீழத்தில் சந்திப்போம் என்ற உறுதியுடன் நிகழ்வு முடிவுற்றது