குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சுட்டுக்கொலை!

0
233

ஹம்பாந்தோட்டையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 35 வயதுடைய ஹக்மன கொடிதுவக்குகே சாகர என்ற நபரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர், ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.