நாட்டில் இன்று (25-11-2020) மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 730 ஆக உயர்ந்தது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 261 உயர்வடைந்ததுடன் 5,720 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 485 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக அதிகரித்தது.
இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 577 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 94 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 65 ஆயிரத்து 505 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.