கொரோனாத் தொற்றால் மேலும் 15 பேர் மரணம்!

0
123

நாட்டில் மேலும் 15 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.