கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய
மாணவர்களுக்கான கணித முகாம்

0
215

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கணித முகாம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கான குறித்த கணித முகாமில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் பி.திவிதரன் கலந்து கொண்டதுடன் கணிதபாட உதவிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.அன்னநவபாரதி, கே.திருச்செல்வம், பிரதி அதிபர்களான சண்முகநாதன், இராதகிருஸ்ணன், கணிதபாட ஆசிரியர் துஸ்யந்தன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.