சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களுக்கு வாழ்வாதார கடனுதவிகள் வழங்கல்

0
149

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சமுர்த்தி வங்கியின் ஊடாக சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களுக்கு வாழ்வாதார கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் நிசாந்தியின் ஒழுங்கமைப்பில் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி வளாகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி கிளையின் ஊடாக சுயதொழில் முயற்சியாளர்களின் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கில் இவ் கடன் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது 10 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் படி பத்து இலட்சம் ரூபா பணம் கடனுதவியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கி வைத்திருந்ததுடன் நிகழ்வில் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முயாமையாளர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர.