ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம் ஆரம்பமாகியது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டம் நடைபெறுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது