மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம் பெற்றது.
காத்தான்குடி குட்வின் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
நாட்டை சூரையாடி மக்களை கஸ்டத்துக்குள்ளாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச உடனடியாக பதவி விகலவேண்டும் அத்துடன் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டத்தின் கோசங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாடக்காரர்கள் சுலோகங்களை தாங்கி நின்றதுடன் தேசியக் கொடியையையும் கையில் ஏந்நியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எல்.சபீல் நகழீமி, மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.சியாத், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் என்.கே.ரமழான் உட்பட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்கள், வர்தர்கர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.