அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து சிறீலங்கா பொதுஜன பெரமுன பிளவுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் பல்வேறு பதவி நிலைகளை வகிக்கும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு பின்னால் இருப்பதாகவும் அதே சமயம் கட்சியின் மேலும் சிலர் பஸில் ராஜபக்ஷவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.