தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் மறைந்த இரா.சம்பந்தனுக்கு, அம்பாறை திருக்கோவில், விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
விநாயகபுரம் பொது மக்கள் மற்றும் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இரா.சம்பந்தனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டு மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் பிரத்தியேகச் செயலாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.