தமிழர் தலைநகரில் பௌத்த விகாரைகள் எதற்கு? – இரா.சம்பந்தன்

0
108

தமிழர் தலைநகரான திருகோணமலையில் கண்ட கண்ட இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவவும் -சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது.

அவர்களின் இந்தச் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம்.

எமது தாயகத்தின் தலைநகர் திருகோணமலை.

இங்கு தமிழர்களை ஒதுக்க அல்லது இல்லாதொழிக்க சிங்கள – பௌத்த அடிப்படைவாதிகள் பெரிய நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர்.

அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

தமிழர்கள் பெருமளவில் வாழும் இடங்களில் பௌத்த விகாரைகள் எதற்கு?
சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள் எதற்கு?
இந்த அடாவடிச் செயல்பாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.