தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்:கந்தையா ஜெகதாஸ்

0
232

இந்த நூற்றாண்டில் பாரியளவிலான இன அழிப்பினை மேற்கொண்ட கோத்தபாய ராஜபக்ஸ நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.


வடகிழக்கில் தமிழ் தேசியத்தின் பெயரால் செயற்படும் அனைத்து கட்சிகளும் மக்களின் நலனுக்காக செயற்படவேண்டிய நிலையில் தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.
இதேநேரம் காலம்காலமாக தமிழ் தேசியத்தினைப்பேசி அரசியல்செய்பவர்கள் தொடர்ச்சியான தவறுகளை செய்துவருகின்றனர்.தமிழ் மக்களின் நிலையினை கருத்தில்கொண்டு இனியாவது ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்தார்.