கடந்த கால ஜனாதிபதி ஆட்சிமுறையில் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பம் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க ஆகும்.
அவருக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க நினைத்தாலும், அதனை குழப்பும் வகையில் தமிழ்
தலைமைகள் செயற்படுவதாக, ஈழவர் ஜனநாயக முன்னணியான ஈரோஸின் செயலாளர் நாயகம் க.பிரபாகரன் தெரிவித்தார்.
மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில், அதில் குழப்பங்கள் ஏற்பட்டால்
அதற்கான பொறுப்பினை சம்பந்தனும், சுமந்திரனுமே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் ‘தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பம் ஜனாதிபதி ரணில்!’: ஈரோஸின் செயலாளர் நாயகம் தெரிவிப்பு