தயாசிறியின் நடத்தை தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு நியமனம்

0
9

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கஇ சபாநாயகர் விக்ரமரத்னவினால் மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போதுஇ சபாநாயகர் இதனை பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். கடந்த மே 20ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு நடைபெற்றபோதுஇ சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு இந்த மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

அதன்படி, குறித்த முறைப்பாடடை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட இந்த குழுவின் தலைவராக,ப்பினர்களாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.