தலைமறைவாகியிருந்த ‘மன்னா மலிந்த’ சிக்கினார்!

0
111

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ‘மன்னா மலிந்த’ எனப்படும் இசுரு நிலந்த பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

கூரிய ஆயுதத்தால் நால்வரைத் தாக்கியமை உள்ளிட்ட சில குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர், நேற்றிரவு ஹோமாகம – முல்லேகம பகுதியில் கைதுசெய்யப்பட்டார்.

தீனமுல்ல கங்கானம்லாகே நலின் சத்துரங்க எனப்படும் மேற்படி நபர், அத்துருகிரிய லடியா என்பருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்றிரவு வீடு திரும்பியபோது கைதுசெய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.