திருகோணமலை பூநகர் பணிச்சங்குளத்தில் நண்பருடன் படகில் தாமரைப்பூ பரிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வந்த 33வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இன்று அதி காலைபூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு நண்பருடன் தாமரைப்பூ பறிப்பதற்காக பைபர் படகில் இருவரும் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்ததாகவும்,
இதனையடுத்து தனக்கு பாதுகாக்க முடியாத நிலையில் நீந்தி கரைக்கு வந்ததாகவும் உயிரிழந்தவருடன் படகில் சென்றவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Home கிழக்கு செய்திகள் திருகோணமலை பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு