திருகோணமலை பேதிஸ்புர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை மட்கோ – மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பீ.பீ.பிரதீப்குமார என்பவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
குறித்த நபரின் கால்,கைகள் வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.