திருகோணமலையில் வன்னி ஹோப் நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய அலுவலகம்; திறந்து வைப்பு

0
112

வன்னி ஹோப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம், திருகோணமலையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
வன்னி ஹோப் நிறுவனத்தினுடைய செயற்பாடுகளை கிழக்கு மாகாணத்தில் விஸ்தரிக்கும் நோக்குடன், உட்துறைமுக வீதியிலுள்ள எஸ்.எல்.ஆர்.சி கட்டட தொகுதியில்
இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஐ.எம்.எச்.ஓ நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
வாழ்வாதாரம், சமூக மேம்பாடு, கல்வி, அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை வன்னி ஹோப் நிறுவனம் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.