திருக்கோவில் பகுதியில் 5000 ரூபாய் வழங்கப்பட்டது

0
250

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 மூன்றாம் அலை அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு அரசினால் நான்காம் கட்ட ஜந்தாயிரம் ரூபா பணம் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று வழங்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் விநாயகபுரம் சமூர்த்தி வங்கி கிளையின் ஊடாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி வழங்கி வைக்கப்பட்டு இருந்ததுடன் விநாயகபுரம் சமூர்த்தி வங்கி பிரிவின் கீழ் உள்ள சுமார் 3600 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டப் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம சேவையாளர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கள விஜயத்தின் ஊடாக வழங்கி வைத்திருந்தனர்.