திருக்கோவில் பிரதேசத்தில் டீசல்
மண்ணெண்ணை விநியோகம்

0
390

திருக்கோவில் பிரதேசத்தில் பொதுமக்களுக்கான டீசல் மற்றும் மண்ணெண்ணை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.

அனுமதி பத்திரத்தின் அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் விவசாயிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்கோவில் பிரதேசசெயலக பிரதேச செயலாளர்
த.கஜேந்திரன் ஒழுங்கமைப்பில் நேற்று முதல் டீசல் மற்றும் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது.

விவசாயம் மற்றும் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபடுக்கிற பொதுமக்களுக்காக திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றம் விவசாய கமநல சேவை, நிலையம் ஊடாக அனுமதி அட்டை(ரோக்கன்) மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது.

திருக்கோவில்,பிரதேச செயலாளரின்,நேரடி கண்காணிப்பிலும் பொலிஸ்சார் மற்றும் இராணுவத்தினர், திருக்கோவில் பல்நோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற அதேவேளை, இனிவரும் காலங்களில் பெற்ரோல் தவிர்ந்த டீசல் ,மண்ணெண்ணை ஆகியவை ரொக்கன் அனுமதி அட்டை மூலம் வழங்கப்படும் என திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் தெரிவித்தார்.