29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருக்கோவில் பிரதேசத்தில் சிறுவர்
தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் 242வது கட்டளைப் படை முகாம் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் திருக்கோவில் 03 சகலகலை முன்பள்ளிப் பாடசாலையில் உலக சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது திருக்கோவில் 03 சகலகலை முன்பள்ளி பாடசாலை அசிரியை தலைமையில் முன்பள்ளி பாடசாலை கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது 242வது கட்டளை படைமுகாமின் கோமாரி மற்றும் காஞ்சிரம்குடா இராணுவத்தினரால் சிறுவர்களுக்கு மாலை அணிவித்து சிறுவர்களை கௌரவப்படுத்தியதுடன் சிறுவர் தின கேக் வெட்டி பரிசில்கள் மற்றும் இனிப்பு பொருட்களும்; வழங்கினர்.இந்நிகழ்வில் 242வது கட்டளை இராணுவ முகாம் கட்டளை அதிகாரி திருக்கோவில் காஞ்சிரம்குடா இராணுவ முகாம் கட்டளை அதிகாரி இராணுவத்தினர் முன்பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles