திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில்
குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

0
171

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பி.பத்மகுமார தலைமையில் தேசிய பொலிஸ் வார நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன்போது இரத்த தான நிகழ்வும் பெண் பொலிசார் தங்குமிட விடுதி திறப்பு நிகழ்வும் மரகன்றுகள் நடும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இரத்ததான நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்; அத்தியட்சகா ரட்ணநாயக்க அக்கரைபற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனவரத்ன அறுகம்பை விசேட அதிரடிப்படை உதவி பொலிஸ் அத்தியடசகர் பத்மசிறீ திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பத்மகுமார திருக்கோவில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இராணுவத்தினர் பொலிஸ்சார் விசேட அதிரடிப்படையினர் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினார்.