திருக்கோவில் விநாயகபுரம் பத்திரகாளி
அம்மன் ஆலய பாற்குடபவனி

0
312

கிழக்கிலங்கை வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் பகுதியில் வங்கக் கடலோரம் அமர்ந்து பக்கர்களுக்கு அருள் பாலித்து வரும் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பாற்குடப்பவணி இன்று இடம்பெற்றது.
பாற்குடப்பவணியானது விநாயகபுரம் சிவன் ஆலயத்தில் இருந்து பக்தர்களால் பாற்குடங்கள் எடுத்தச் செல்லப்பட்டு விநாயகபுரம் பத்திரகாளி அம்மனுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றது.

பாற்குடப்பவணியில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி இருந்தனர்.
கடந்த 04ஆம் திகதி விநாயகபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய வருடாந்த அலங்கார உற்சவமானது எதிர்வரும் 09ஆம் திகதி அதிகாலை தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.