திலீபன் 37வது நினைவு தினம்

0
58

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் 37ஆவது நினைவு தினம், இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொங்குதமிழ் தூபியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி
கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.

அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.