தெல்தோட்டை நகரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

0
122

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தெல்தோட்டை பட்டியகம பிரதேசத்தில், வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த வீட்டில், எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்து 16 நாட்கள் கடந்த நிலையிலேயே இவ்வாறு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு உணவு தயாரிப்பில்; ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்திலேயே இவ்வாறு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் வீட்டிலுள்ள எந்தவொரு நபருக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை .

மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.