தைப்பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது

0
264

தைப்பொங்கல் பண்டிகையினை உலக தமிழ் மக்கள் இன்று கொண்டாடுகின்றனர். அந்த வகையில் மலையகத்தில் உள்ள ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்;ளையார் ஆலயத்தில் தைத்திருநாளினை முன்னிட்டு விசேட சூரிய பொங்கல் வைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சந்திராநந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் போது விநாயகர் வழிபாடு அபிசேக அலங்கார பூஜை,வசந்த மண்டப பூஜை,உள்ளிட்ட விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. குறித்த பூஜை வழிபாடுகளில் இந்துக்கள் அதிகாலை எழுந்து வீடு வாசல் கழுவி,நீராடி வாசலில் கோலமிட்டு புத்தாடை அணிந்து பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டிருப்பது காணக்கூடியதாக இருந்தன. இந்துக்களின் வீடுகளில் சூரிய பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி செலுத்துவதனையும் காணக்கூடியதாக இருந்தன. அதனை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதேவேளை தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைதிருநாள் பூஜை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இன்று காலை ஆலயத்திற்கு முன்பாக பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு மாமாங்கேஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று தைதிருநாள் பூஜை நடைபெற்றது. இதன்போது நாட்டில் அனைத்து மக்களும் நோய்நொடிகள் இன்றி சாந்தியும் சமாதானமுமாக வாழவேண்டி விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

உழவர் திருநாளான இன்று மலையக பெருந்தோட்ட வாழ் மக்கள் தைப்பொங்கலை கொண்டாடினர். அந்தவகையில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.