நாட்டின் சட்டத்தை மீறி எவரும் செயற்பட முடியாது -டிரான் அலஸ்

0
127

மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளை அள்ளி வீசி அரசியல் செய்பவர்களுக்குச் சிறை வாழ்க்கைதான் பரிசாகக் கிடைக்கும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘நாட்டின் சட்டத்தை மீறி அரசியல்வாதி உள்ளிட்ட எவரும் செயற்பட முடியாது. சட்டங்களைச் சவாலுக்குட்படுத்தி எவரும் கருத்துக்களையும் வெளியிட முடியாது.
இன வன்முறையை – மத வன்முறையைத் தூண்டும் வகையில் எவரும் செயற்படவும் முடியாது. சிலர் சட்டத்தை மதிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள். அவர்களுக்குச் சிறை வாழ்க்கை தான் பரிசாகக் கிடைக்கும்’ என டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.