நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

0
286

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நிஜித் சுமணசேன குறிப்பிட்டுள்ளார்.

வீடுகள் மற்றும் சுமார் 20வீதமான சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக நிஜித் சுமனசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.