


இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனை பலாலி வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.