நேற்றைய தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டத்தினரே அதிகம்!

0
366

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகி இருந்தனர்.

அதன்படி, நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 526 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகளவானோர் மீகஹவத்த, ராகமை, தொம்பே ஆகிய பிரதேசங்களில் இருந்து பதிவாகி உள்ளனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 287 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி இருந்தனர்.

அதேபோல், இரத்தினபுரி மாவட்டத்தில் 260 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 155 பேரும், காலி மாவட்டத்தில் 134 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 123 பேரும், கண்டி மாவட்டத்தில் 93 பேரும் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 91 பேரும் பதிவாகி உள்ளனர்.

இதற்கமைய நேற்றைய தினம் நாட்டில் 2,284 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 2,259 பேர் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

மேலும் 25 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 225,922 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 190,464 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ள நிலையில் மேலும் 33,198 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.